கொரோனாவினால் மூளைக்கு அதிக பாதிப்பு! விஞ்ஞானிகள் அதிர்ச்சி ஆய்வறிக்கை;

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு இன்னும் தடுப்பூசிகள் கண்டு கண்டுபிடிக்கலவில்லை, கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக, பிரிட்டன் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் எந்த அறிகுறியும் இல்லாமல் கெரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும், தொற்றில் இருந்து விடுபட்டவர்களுக்கும் மூளை பாதிக்கப்படுவது அதிக என விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர். சிலருக்கு கொரோனாவின் முதல் அறிகுறியாக இந்த மூளை பாதிப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் தற்போதுவரை, மூளை பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 பேரிடம் மேற்கொண்ட சோதனையில் 12 பேருக்கு மூளை வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 10 பேருக்கு மயக்கம் இருந்ததும், 8 பேருக்கு நரம்பு பாதிப்பு இருந்ததும், மேலும் 8 பேருக்கு பக்கவாதத்தை ஏற்படுத்தக் கூடிய நரம்பு மண்டல பாதிப்பு இருந்தததாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு ஏற்பட்டோரில் 5 சதவீதம் பேர் உயிரிழந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணமடைவதாகவும் ஆனால் சிலருக்கு இந்த மூளை பாதிப்பு நீண்டநாள் பிரச்சினையாக மாறுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆரம்பகால நோய் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும் நோயாளியின் குணப்படுத்துதலை மேம்படுத்துவதற்கும் நரம்பியல் விளைவுகளின் ஆபத்து குறித்து மருத்துவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான சுவாச பிரச்சினைக்கான அறிகுறிகளை கட்டவிட்டாலும், அவர்களுக்கு பக்கவாதம், நரம்பியல் பாதிப்பு மற்றும் ஆபத்தான மூளை வீக்கம் உள்ளிட்ட நரம்பியல் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

No comments