பாரவூர்தி விபத்துக்குள்ளனது! ஓட்டுநர் பலி!

trinco
திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதி வில்கம் விகாரை பகுதியில் பாரவூர்தி ஒன்று இன்று புதன்கிழமை (03.05.2020) விபத்துக்குள்ளானது. 

விபத்தில் பாரவூர்தி ஓட்டுநரான  கண்டி- கலகெதர பகுதியைச் சேர்ந்த சன்ஜய சதுன் விக்ரமசிங்க (33வயது என்பவர் உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி சீமெந்து ஏற்றுவதற்காக பயணித்துக்கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை சடல அறையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

trinco
trinco

No comments