சட்டவிரோத கால்நடை இறைச்சி! நாவந்துறையில் சிக்கினர் இருவர்!

சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று சனிக்கிழமை யாழ்.நாவாந்துறைப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் கால்நடைகள் வெட்டி விற்பனை செய்வது குறித்து பொது மக்களால் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு மாநகர சபை ஊழியர்களுடன் சென்ற பொது சுகாதார பரிசோதர்கள் அப்பகுதி பொது மக்களுடன் இணைந்து இறைச்சி வெட்டப்படும் இடத்தினை முற்றுகையிட்டனர்.

இதன் போது 520 கிலோ கிறாம் மாட்டிறைச்சி மீட்கப்பட்டுள்ளதுடன், இறைச்சிக்காக வெட்டுவதற்கு வெட்ட தயாராக கட்டி வைத்திருந்த 3 மாடுகளும், 2 ஆடுகளும் மீட்கப்பட்டுள்ளது.

No comments