சொல்வதை கேட்பதில்லை:அதனாலேயே சைபர் தாக்குதல்!


இலங்கையில் பெரும்பாலான அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் உரிய அறிவுறுத்தல்களை பின்பற்றாமையே சைபர் தாக்குதலிற்கு காரணமென தெரிவித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன.

கணினி அவசர தயார்நிலை குழு  வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றாமை காரணமாகவே, அண்மையில் அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

இலங்கையில் அண்மையில் அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இலங்கையில் இணைய பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு காணப்படுகின்றது. அத்துடன், விமானப்படையினரின் கணினிப்பிரிவும் மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது.  இவை இரண்டும் இணைந்து செயலாற்றுகின்றன.

இந்த நிலையில், சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு  வழங்கியுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments