முள்ளிவாய்க்கால் முற்றத்திலும் நினைவேந்தப்பட்டது தமிழின அழிப்பு நாள்!

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழினப் படுகொலைக்கான நிகழ்வுகள் சுடரேற்றி நினைவேந்தப்பட்டது. சுடரினை முள்ளிவாய்க்கால் நினைவு
முற்றத்தின் நிர்வாகப் பொறுப்பாளர் கென்னடி அவர்கள் ஏற்றிவைத்தார். கொரோன என்ற உலகப் பேரிடர் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட உணர்வாளர்களுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

இதேநேரம் உலகத் தமிழர் இயக்கத்தின் தலைவர் ஐயா நெடுமாறன் அவர்கள் தனது வீட்டில் மனைவி மற்றும் பேரப்பிள்ளையுடன் சுடரேற்றி படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு வணக்கம் செலுத்தினார்.

No comments