யானைத் தாக்கியது! தந்தையும் மகளும் படுகாயம்!


madawachiya
வவுனியா மதவாச்சி பிரதேசத்தின் பூனாவை பகுதியில் யானை தாக்கியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியும் சேதமடைந்துள்ளது.

நேற்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் ஏ9 வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியையே வீதியோரத்தில் நின்ற யானை தாக்கியுள்ளது.

அதனால், முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் முச்சக்கரவண்டியும் முழுமையாக சேதமடைந்துள்ளது.

madawachiya

No comments