"தமிழீழ இனப்படுகொலை" நினைவேந்தலும், இணையப் பரப்புரையிலும் இணைந்துகொள்ளுவோம்!
இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் அனைத்து மக்களையும் மிகப் பெரிய அளவில் அச்சுறுத்தி வருவதால், நினைவேந்தல் நிகழ்விற்கு மக்கள் நேரடியாக ஒன்று கூட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் , நீதிக்கான குரலையோ, நம் மக்களுக்கான அஞ்சலி செலுத்துதலையோ இந்த ஆண்டு நாம் கைவிடக் கூடாது என்று ஒவ்வொருவரும் அவரவரின் வீட்டின் முன்பிருந்து, தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து ,மாலை 6 மணியளவில் இனப்படுகொலைக்கு நீதி கோரி சிறிய அளவிலான பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்புவோம்.அதை முகநூலில் பதிவு செய்யவும் மக்களுக்கு கோரிக்கையாக விடுத்துள்ளது மே பதினேழு இயக்கம்.
கீழ் கண்ட முழக்கத்தை மக்கள் எழுப்பிட ,குறிப்பாக பதாகையில் எழுதிப்பிடித்திட கோரிக்கை வைக்கிறது
*தமிழீழத்தில் ஐநா முன்னிலையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்!
*தமிழீழ இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை அமைக்கப்பட வேண்டும்!
*தமிழர்களாய் ஒன்றிணைவோம்!
*தமிழீழ
இனப்படுகொலையை நினைவேந்துவோம்!
மேலும், ட்விட்டர் இணையத்தளத்தில் மே 17 அன்று காலை 10 மணி முதல் #Justice4TamilGenocide மற்றும் #Referendum4TamilEelam எனும் Hashtag பரப்புரையினை நிகழ்த்தி, தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு நீதி கேட்கும் பரப்புரையை இந்தியா முழுதும் கொண்டு சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பரப்புரையிலும் உலகளாவிய தமிழ் மக்களை பங்கெடுக்க அழைப்பு விடுத்துள்ளது
Post a Comment