வெளிநாட்டுப் பயணிகளை 2 வாரங்கள் தனிமைப்படுத்த பிரித்தானியா முடிவு!

பிரித்தானியாவுக்குள் நுழையும் வெளிநாட்டுப் பயணிகளை விமான நிலையத்தில் இருவாரங்கள் தனிமைப்படுத்தவுள்ளதாக அரசாங்கம்
அறிவித்துள்ளது. இச்சட்டம் மே மாதம் முதல் நடைமுறைக்கு வருகின்றது.

வெளிநாட்டு மக்களால் தான் பிரித்தானியாவுக்குள் கொரோனா தொற்று நோய் வந்தது என அரசாங்கம் கருதுகின்றது. இதனால் இதுவரை 20,000க்கு மேற்பட்டோர் பிரித்தானியில் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று நோயின் இரண்டாவது அலையைத் தடுப்பதற்காக அரசாங்கம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது. இந்த நிபந்தனையை மீறி பிரித்தானியாவக்குள் வர எந்த ஒரு பயணியும் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனக் கூறுப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கிரீஸ், இந்தியா, இலங்கை போன்ற உலக நாடுகளில் இதுபோன்ற திட்டம் அமுலில் உள்ளமை இங்கே நினைவூட்டத்தக்கது.

No comments