யாழில் சடலம் மீட்பு தொடர்கிறது

யாழ்ப்பாணம் - ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் இன்று (26) காலை எரிந்த நிலையில் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மயிலங்காடு பகுதியில் வீதியோரமாக எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் இருப்பது இனங்காணப்பட்டுள்ளது.

ஆண் ஒருவரின் சடலம் ஒன்றே இவ்வாறு காணப்பட்டுள்ளது. குறித்த நபர் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

மேலும் இந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments