வடக்கில் கொரோனா பரிசோதனை உச்ச பெற வேண்டும்

கொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், வெலிசறை கடற்படை முகாமிலிருந்து வீடு திரும்பிய சிப்பாய்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருவதனால் அவர்கள் விடுமுறையில் சென்ற மாவட்டங்கள் நான்கு என மொத்தமாக கொரோனா தொற்று மாவட்டங்கள் தற்போது 20 ஆக உயர்வடைந்துள்ளன.

அந்தவகையில், தற்போது திருகோணமலை, மாத்தளை, மொனராகலை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்கள் இணைந்துள்ளன. இதனால் இலங்கையில் கொரோனா தொற்றில்லா பகுதி சுருங்கி வருகின்றது.

இத்தகைய நிலையில் நாங்கள் எமது பரிசோதனைகளை பல்வேறுபட்டவர்களுக்கு விஸ்தரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. என்றார்.

அத்துடன் அவர் 7 அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

1.நாளாந்தம் ஏற்படுகின்ற சந்தேகத்திற்குரிய தொற்றாளர்களுக்கு சோதனை செய்தல்.

2. உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களிற்கு மீண்டும் சோதனைகளை செய்தல்.

3. ஆரம்ப பரிசோதனையில் தொற்றில்லை என கண்டுபிடிக்கப்பட்டவர்களுக்கு சோதனைகளை மீண்டும் மீண்டும் பரிசோதனைகளை செய்தல்

4. தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுடன் நேரடி தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களை சோதனை செய்தல்.

5. தனிமைடுத்தப்பட்ட முகாங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு சமூகத்திற்கு இனணக்கப்பட முன்னர் சோதனைகளை மேற்கொள்ளல்

6. வெளிநாட்டிலிருந்து வருகை தந்த சகல தரப்பினரையும் சோதனை செய்தல்.(முதல் தொடர்புள்ளவர்கள்- யாழ்ப்பாணத்தில் 1200பேர்)

7. கொரோனா தொற்று அறிகுறிகளை காட்டுகின்ற சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும் இராணுவம் உள்ளிட்ட தொற்றுக்குள்ளாக கூடிய அபாயம் உள்ளவர்க்களுக்கு சோதனை செய்தல்.

No comments