கொழும்பில் அதிர்ச்சி; இருநாளில் 42 கொரோனா

இலங்கையில் இன்று (20) 24 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 295 ஆக உயர்ந்துள்ளது.

தனிமை மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கொழும்பு - பண்டாரநாயக்கபுரவை சேர்ந்த இந்த 24 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றும் அதே பகுதியை சேர்ந்த தனிமை மையத்தில் இருந்த 17 பேருக்கு தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.

No comments