ஊரடங்கில் கசிப்பு உற்பத்தி அமோகம்

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டவிரோத மதுபான (கசிப்பு) உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதாக கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாள் (மார்ச்-20) தொடக்கம் கடந்த 15ம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இது தொடர்பில் 100 இடங்கள் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளதாக கலால்வரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, 400 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

No comments