கொரோனா அச்சம்:தப்பித்தவர்கள் இலங்கை இராணுவத்தால் கை


ஹப்புத்தலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இணைக்கப்பட்ட நபரொருவர் அங்கிருந்து மேலும் இருவருடன் தப்பியோடி, லொறி ஒன்றில் பயணித்தபோது, நேற்று (12) இரவு, பெரகல நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரும், தியத்தலாவை இராணுவ முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். 
குறித்த மூவரையும் 14 நாட்கள் வரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

No comments