சிறுவனை கடத்த முயன்ற பங்களாதேஷிகள் கைது

கண்டி - கடுகஸ்தோட்ட பகுதியில் நேற்று (07) மாலை 12 வயது சிறுவனை கடத்த முயன்ற பங்களாதேஷ் பிரஜைகள் நால்வர் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுவன் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தனது நண்பர்களுடன் மேலதிக வகுப்பொன்றுக்கு சென்று திரும்பி கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த சந்தேகநபர்கள் வான்ரக வாகனத்தில் வந்து அந்த சிறுவனை சிறிது தூரம் இழுத்து சென்று வாகனத்தில் ஏற்றிச் செல்ல முயற்சித்துள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு பிரவேசித்த சிறுவனின் தந்தை மகனை மீட்டுள்ளார். பின்னர் சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தை பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய கட்டுகஸ்தோட்ட காவல்துறையினர் முன்னெடுத்து விசாரணைகளுக்கு அமைய குறித்த 6 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் நான்கு பேர் பங்களாதேஸ் பிரஜைகளுடன் ஏனைய இருவரும் கடவத்தை மற்றும் கலகெதர பகுதிகளை சேர்ந்தவர்கள்.

No comments