டக்ளஸ் தனித்து வீணையிலாம்?


நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியானது தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

கட்சியின் வீணைச் சின்னத்திலேயே தான் போட்டியிடவுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா யாழில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள போதும் தேர்தல் சின்னங்கள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பில் இன்னும் சில கட்சிகள் அறிவிக்காத நிலைமையும் இருக்கின்றது. குறிப்பாக வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீட்டுச் சின்னத்திலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சைக்கிள்ச் சின்னத்திலும், தமிழ் மக்கள் கூட்டணி மீன் சின்னத்திலும் களமிறங்கவுள்ளன. இதே போல தென்னிலங்கை தேசிய கட்சிகள் பலவும் வடக்கில் களமிறங்கவும் இருக்கின்றன.

குறிப்பாக வடக்கில் தமிழ்க் கட்சிகளில் ஒன்றாக இருக்கின்ற ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி தேர்தலில் போட்டியிடும் சின்னம் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பில் எந்தவிதமான அறிவித்தல்களையும் மேற்கொள்ளாத நிலைமை இருந்தது. அதே நேரத்தில் தனித்தா அல்லது அரசுடன் இணைந்து கூட்டாக போட்டியிடுகின்றது என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டும் வந்திருந்தன.

இவ்வாறான நிலைமையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியானது அக் கட்சியின் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாகவும் தமது கொள்கைகளுடன் உடன்படுகின்ற கட்சிகளையும் ஏனைய தரப்பினர்களை இணைத்துக் கொண்டு கூட்டாக பயணிக்க உள்ளதாகவும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

No comments