கொரோனா அச்சம்; மட்டுவில் மாணவர் வருகை வீழ்ந்தது

மட்டக்களப்பில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளதால் மட்டு நகர் பாடசாலைகளில் நேற்று (10) மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி காணப்பட்டதாக தெரியவருகிறது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயம், ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயம், புணானை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகியவற்றில் மாணவர் வருகை வீழ்ச்சியடைந்து, குறித்த பாடசாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டுள்ளன.

ஆயினும் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் வருகையில் மாற்றமிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments