ரணில் முதுகில் குத்தினார்:சீ.வீ.கே வாக்குமூலம்?



ஐக்கிய தேசியக் கடசியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒகடோபர் மாதமே ஏமாற்றி விட்டார்.அதுவரை நாம் ஐ.தே.காவை நம்பியது உண்மைதான் என தெரிவித்துள்ள தமிழரசுக் கடசியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் ரணில் எம்மை நம்ப வைத்து ஏமாற்றியது உண்மைதான் அதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அவர் இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

ஐக்கிய தேசியக் கடசியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒகடோபர் மாதத்தில் ஏமாற்றி விட்டார்என்று எமக்கு தெரிய வந்துவிட்ட்து. அதுவரை நாம் ஐ.தே.காவை நம்பியது உண்மைதான். ரணில் எம்மை நம்ப வைத்து ஏமாற்றியது உண்மைதான் அதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஒகடோபர் அரசியலமைப்பு அறிக்கை பாராளுமனறத்தில் சமர்ப்பிக்கப்படட போது குழப்பம் வந்த போது  இதற்கு நான் பொறுப்பில்லை சபையே பொறுப்பு என கூறியிருந்தார். அதில் இருந்து அவர் எம்மை ஏமாற்றி விடடார் என நாம் அறிந்து கொண்டோம். எனினும் நாம் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் மகிந்த குடும்பத்தின் ஆடசிக்கு மீண்டும் வந்து விடக் கூடாது என்றே தொடர்ந்தும் ஆதரவு கொடுத்தோம்.

இனிவரும் காலங்களில் ஐ.தே.காவுக்கு ஆதரவான பாராளுமனற பிரதிநிதிகள் இருக்க மாடடார்கள்.நாம் பட்டு தெளிந்து விடடோம்.நாம் அனைவருடனும் பேசுவோம் அதற்காக ஐக்கிய தேசியக் கடசிக்கு தான் ஆதரவு வழங்குவோம் என்று இல்லை.இனி நிபந்தையுடனேயே இறுக்கமான முறையில் நாம் அணுகுவோம்.ஏற்கனவே நாம் அனுபவப் பட்டுவிடடோம்

No comments