அரசை எதிர்த்து மட்டுவில் உள்ளிருப்பு?

சகலவளிகளிலும் பின் தள்ளப்பட்ட எமது மாவட்டத்தின் நிலைமை அறிந்தும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளை மட்டக்களப்பு புணானை கம்பசில் தடுத்து வைத்து கண்காணிக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்பட்டு உள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு வீட்டுக்குள் முடங்கி எதிர்ப்பினைக் காட்டும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

"எமது மட்டக்களப்பு மாவட்டம் சகலவளிகளிலும் பின் தள்ளப்பட்ட மாவட்டம் இங்கு ஒருவருக்கேனும் நோய் தொற்று ஏற்பட்டால் எமது மட்டக்களப்பு மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டு, நினைத்து கூட பார்க்க முடிய நிலைக்கு எம் மாவட்டம் சென்றுவிடும் எனவே இச்செயற்பாட்டை அனுமதிக்கக் கூடாது என்பதனை வலியுறுத்தி எதிர்வரும் 12ம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக முடக்கப்படும் வகையில் எல்லோரும் வீட்டிற்குள் முடங்கி எமது எதிர்ப்பினை வெளிகாட்டுவதற்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்".

இவ்வாறு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார்.

No comments