திருந்த மறுக்கும் மிருகங்கள்?


யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.


குறித்த மாணவர்கள் க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு சேரவுள்ள மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களை வாங்கி மிகக் கேவலமான முறையில் உரையாடி வருகின்றனர்.
இவர்களின் தொல்லை தாங்காது மாணவி ஒருவர் பயத்தின் காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை மாணவியிடம் விசாரித்த போதே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த மாணவி உட்ப பல மாணவிகளிடம் 2017ம் ஆண்டு மாணவர்கள் இவ்வாறான கேவலங்களை புரிந்துள்ளார்கள். மாணவியின் தொலைபேசி இலக்கத்திற்கு ஏராளமான தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு வந்துள்ளது.
தாங்கள் சொல்வதை எல்லாம் செய்யச் சொல்லியும் வாட்சப் குறுாப் உருவாக்கி அவர்களின் புகைப்படங்களை அதற்குள் போடச் சொல்லி தொல்லைப்படுத்துவதுடன் தனித் தனி அழைப்புக்கள் எடுத்து வட்சப் ஒன்லைனில் நிர்வாணமாக நிற்கச் சொல்லுவதாகவும் அதிர்ச்சித் தகவல்களை குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

No comments