முல்லையில் துப்பாக்கி சூடு! ஒருவர் பலியானதால் பதற்றம்

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாங்குளம் பாலைப்பாணி பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள குளமொன்றுக்கு அருகிலிருந்து இன்று (06) அதிகாலை குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி உதயநகர் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஜெயா (46-வயது) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட குரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்றும் குறித்த நபர் உள்நாட்டு துப்பாக்கி மூலம் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments