ஆசிரியரை கோரி போராட்டம்!

மட்டக்களப்பு - ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 5 மாணவர்களுக்கு கற்பிக்க தகுதியான ஆசிரியரை நியமிக்க கோரி இன்று (24) காலை பாடசாலை வளாகத்தில் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்து தங்களுக்கான தீர்வை கூற வேண்டும் எனக்கூறி, பெற்றோர் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் ‘எங்கள் பாடசாலையை பழிவாங்காதீர்கள்’, ‘வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும்’, ‘எமது மாணவச் செல்வங்களை பறக்கணிக்காதே! தரம் 5 மாணவர்களுக்கு ஆசிரியர் தேவை’ என எழுதப்பட்ட பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்ட இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் வருகை தந்து ஆர்பாட்டடக்ககாரர்களுடன் தங்கள் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடினார். மேலும் ஆர்பாட்டக்காரர்களினால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

No comments