ஓமந்தையில் பலியானது ஒரு குடும்பமே?

வவுனியா – ஓமந்தை, பன்றிக்கெய்த குளம் பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

இதில் நால்வர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, காரைநகரைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான பார் சோமர் என்று அழைக்கப்படும் ராமலிங்கம் சோமசுந்தரம் (வயது-83), ஆறுமுகம் தேவராஜா (வயது-62), தேவராஜா சுகந்தினி (வயது-51), தேவராஜா சுதர்சன் (வயது-30) மற்றும் அவர்கள் பயணித்த வாகனத்தை செலுத்திச் சென்ற சாரதியான விஜயகுமார் ரொசாந்தன் (வயது-24) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் குறித்த குடும்பத்தை சேர்ந்த சோமசுந்தரம் லக்சனா (வயது-29) என்பவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

No comments