யாழில் ஆபத்தில்லை: ரி.சத்தியமூர்த்தி ?


வடக்கில் உள்ள மக்கள் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில் என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோன தாக்கம் ஏற்படும் பட்சத்தில் அதனை தடுக்கவும் உரிய சிகிச்சை வழங்கவும் யாழ்.போதனா வைத்திய சாலை தயாராக உள்ளது என்றும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்திய சாலை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளனவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்குவதற்கு தயாராக உள்ளது. 

வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு தனியான விடுதி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

விடுதியில் பணியாற்றுவதற்கான உத்தியோகஸ்தர்கள் மற்றும் வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் பூரண வைத்திய சேவை செய்ய கூடிய வசதிகள் போதனா வைத்தியசாலை உள்ளது. எனவே அந்த வைரஸ் தொற்றுத் தொடர்பில் பொது மக்கள் பீதியடைய தேவையில்லை.

இதுவரையில் கொரோனோ வைரஸ் தொற்றுத் தொடர்பில் எவரும் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை. நாட்டில் சீனப் பெண்ணை தவிர்ந்து வேறு எவரும் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானதாக அண்டறியப்படவில்லை. எனவே மக்கள் பயம் கொள்ளத் தேவையில்லை.

குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்குள் இலங்கைக்கு வந்தவர்கள் இந்த வைத்திய பரிசோதணைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

வைரஸ் தொற்று தொடர்பில் சந்தேகம் உள்ளவர்களுடைய மாதிரிளை கொழும்பிற்கு அனுப்பிவைக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

No comments