மாதகலில் சிக்கிய 180 கிலோ!

யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை கஞ்சா பொதிகளை கடற்படையும் மதுவரித் திணைக்களம் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.

நேற்று (31) மாலை 5 மணியளவில் மதுவரித் திணைக்களத்தினர் கடற்படையுடன் இணைந்து குறித்த வீட்டில் சோதனை மேற்கொண்ட போது 180 கிலோ கிராம் நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டன.

இதன்போது குறித்த வீட்டில் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இன்று (01) அவர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இந்த கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டு இங்கு மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

No comments