மகிந்த என்ன பேசுகிறார் என சிந்திக்கவில்லை: சி.வி


என்னுடைய ஐந்து வருட பதவிக்காலத்தில் ஒரு சதத்தையேனும் நாம் மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பவில்லை. 2014ம் வருடத்தில் 12,000 மில்லியன் கேட்டோம். 1,650 மில்லியன் தான் தரப்பட்டது என்று நினைக்கின்றேன். அப்படி இருக்கையில் திருப்பி அனுப்ப காசெங்கு இருக்கின்றது என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். 

வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விக்னேஸ்வரன் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் திருப்பி அனுப்பிவிட்டார் என்றும் பிரதமர் மகிந்த இராஜபக்ச இந்தியாவில் கூறியுள்ளமைக்கு சி.வி.விக்கினேஸ்வரன் பதிலளித்துள்ளார்.

நாங்கள் பதவியில் இருந்து வந்த பின்னர் சென்ற வருடம் கூட ஒரு பாரிய தொகை மத்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருக்கின்றது. பணத்தை மத்திய அரசாங்கம் எமக்குத்தராமல் இருந்துவிட்டு நாம் திருப்பி அனுப்பினோம் என்று இந்தியாவில் சென்று எமது பிரதமர் கூறுவது விந்தையாக இருக்கின்றது. 

நாங்கள் உதாரணமாக 12,000 மில்லியன் கேட்டால் எமக்கு சுமார் பத்தில் ஒரு பங்கைத் தந்துவிட்டு மிகுதி அனைத்தையும் மத்திய அமைச்சர்களுக்கு தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் கொடுத்து வந்துள்ளன. அவர்கள் அந்தப் பணம் அனைத்தையும் வடக்கிற்குச் செலவிடுவதாக பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பிரசித்தப்படுத்துவார்கள். ஆனால் நடப்பது என்ன? அவர்களுக்குக் கிடைத்த பணம் அனைத்தையும் வடகிழக்கு மாகாணத்திற்கு அனுப்புகின்றார்களோ என்பது ஒரு புறம் இருக்க அனுப்பப்படும் பணம் எமக்கு அனுப்பப்படுவதில்லை. அரசாங்க அதிபர்களுக்கே அனுப்புகின்றார்கள். அவர்கள் பலர் பணத்தைத் திருப்பி அனுப்புகின்றார்கள் என்று கேள்வி. ஒருவேளை பணத்தைத் திருப்பி அனுப்புவதால் மத்தியின் கடைக்கண் பார்வை தமக்குக் கிடைக்கும் என்று அவர்கள் அவ்வாறு அனுப்புகின்றார்களோ அல்லது வேறு காரணங்களுக்காகத் திருப்பி அனுப்புகின்றார்களோ என்பது பற்றி அவர்களே எமக்கு அறிவுறுத்த வேண்டும். 

பிரதமர் பிறநாடுகளில் பேசும் போது உண்மையை அறிந்து பேச வேண்டும். உள்நாட்டில் அரசியல் மேடைகளில் பேசுவது போல் பேசக்கூடாது.
அதே வேளை  பிரதமருக்கு 1992ம் ஆண்டின் 58ம் இலக்க சட்டம் பற்றித் தெரியுமோ என்று எனக்குத் தெரியவில்லை. அதன்படி 13வது திருத்தச் சட்டத்தில் எமக்கு வழங்கப்பட்ட மிகக் குறைந்த அதிகாரப் பகிர்வில் மத்திய அரசாங்கம் தமக்கென ஒரு அதிகாரப் பகிர்வொன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது தந்த அதிகாரத்திலும் பாதிக்குமேல் குறித்த ,ந்த சட்டத்தின் ஊடாக மத்திய அரசாங்கம் எம்மிடம் ,ருந்து பறித்துவிட்டது. அரசாங்க அதிபர், மாவட்டச் செயலாளர், கிராம சேவகர் ஆகியோர் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண அரசாங்கத்தின் அதிகாரத்தின்; கீழ் ,ருந்தனர். மேற்படி சட்டம் அவர்களை மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக மாற்றிவிட்டது. அவர்கள் தான் பணத்தைத் திருப்பி அனுப்பி வந்துள்ளார்கள் என்று நினைக்கின்றேன்.

அதாவது மத்திய அரசாங்கத்தின் அலுவலர்களே எமக்கு உதவி புரிவதாக காட்டிக் கொண்டு எம் சார்பில் செலவிடவேண்டியிருந்த பணத்தை மத்திய அரசாங்கத்திற்கு திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். அதைப் பிரதமர் அவர்களே பரிசீலித்துப் பார்க்க வேண்டும். அபாண்டமாக எம்மேல் பழி போடுவதை அவர் நிறுத்த வேண்டும். அவரின் புரிதலுக்கு ஒன்றைக் கூற விரும்புகின்றேன். 2016ம் ஆண்டில் முழு இலங்கையிலும் இருக்கும் 850க்கும் மேற்பட்ட திணைக்களங்கள், அமைச்சுக்கள் ஆகியவற்றில் சிறந்த நிதி நிர்வாகத்திற்காக எனது முதலமைச்சர் அமைச்சுதான் முதற் பரிசைப் பெற்றது. பிரதமரின் அமைச்சேதேனும் அவ்வாறு எப்பவென்றாலும் பரிசு பெற்றதோ என்பதை அவர்தான் கூற வேண்டும எனவும் அவர் தெரிவித்துள்ளார்;.

No comments