அங்கஜனுக்கு எதிர்ப்பு - இருதரப்பு தள்ளுமுள்ளு

தீவகப் பகுதியில் உள்ள மூன்று பிரதேச செயலகங்களை இணைத்து நடைபெறும் மூன்று பிரதேசங்களுக்குமான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனுக்கு உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுத்தனர்.

இதனால் வேலணை பிரதேச செயலகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. வேலணை பிரதேச செயலகத்தில் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (27) காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு பிரதேசசபை உறுப்பினர்கள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தி வேலணை பிரதேசசபை உறுப்பினர்கள் பிரதேச செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அங்கஜன் இராமநாதனை பிரதேச செயலகத்தின் நுழைவாயிலில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் இடை வழி மறித்தனர்.

இதனால் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் அங்கஜனுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

பின்னர் நீண்ட நேரத்தின் பின்னர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. எனினும் பிரதேச சபை உறுப்பினர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை.

No comments