விக்கினேஸ்வரன்,சம்பந்தன் வீட்டிற்கு ?


வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால் உடனடியாக அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும். புதுப்புது தலைவர்களினால் பாதிக்கப்படுவது என்னவோ தமிழ் மக்கள்தான்.அனைத்து கட்சிகளும் ஒன்றினைய வேண்டும் என வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் அமிர்தநாயகம் உயிரோட இருக்கும் வரையில் மாவை கட்சியின் ஊழியன். சம்பளம் வாங்கி வேலை செய்தவர். பிறகு அமிர்தலிங்கத்தின் ஆசனத்தை கேட்டு சண்டை பிடித்தவர்.
தந்தையின் ஆசனத்தை தனக்கு தருமாறு கோரிய போது கொள்கை அடிப்படையில் அதனை நாம் வழங்க மறுத்த போது , எம்முடன் முரண்பட்டு தனித்து போட்டியிட்டவர் குமார் பொன்னம்பலம்.
சுகதேகியாக இருந்த ஜீ.ஜீ. பொன்னம்பலம் அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி சார்பில் தமிழகத்தில் வழக்காடி வென்று ஒரு கிழமைக்குள் இயற்கை எய்தினார். அவரின் உடலத்தை யாழ்ப்பாணம் கொண்டு வந்து, முதலில் கூட்டணி அலுவலகத்தில் அஞ்சலிக்கு வைத்த பின்னரே காங்கிரஸ் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்கள்.
ஆனையிறவு மீள பிடிப்பது பகல் கனவு. 35ஆயிரம் போர் வீரர்களை காப்பாற்றுங்கள் என சர்வதேசத்திடம் மண்டியிடும் காலம் மீண்டும் வரும். அன்றைக்கு பிரபாகரனை சர்வதேசம் சுற்றிவளைக்கும் காலம் வரும் அன்றே யுத்தம் முடிவுக்கு வரும் என அப்போதைய அமைச்சர் ரத்வத்தைக்கு நாடாளுமன்றில் கை நீட்டி கூறியவன் நான். அப்போது என்னருகில் சம்பந்தன் இருந்து என்னை பிரமிப்பாக பார்த்தார். அதே பின்னர் நடந்தது என்பது வரலாறு.
மக்கள் சேவை என வந்த பின்னர் அப்புக்காத்தர் வேலை செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் இன்றைக்கு கிளிநொச்சியில் காணி உறுதி எழுதியே கோடீஸ்வரன் ஆகியிருப்பேன்.
மகேஸ்வரன் , ரவிராஜ் , லக்‌ஷமன் கதிர்காமர் என 500க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் சமஸ்டியை முன்வைக்க, மஹிந்த ஒற்றையாட்சியை முன்வைத்தார். அந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணித்தார்கள். அப்படியிருக்கையில் சமஸ்டி கோரிக்கையை 49 வீத சிங்களவர்கள் ஏற்றே ரணிலுக்கு வாக்களித்தனர்.
சம்பந்தன் , மாவை , சுமந்திரனை தவிர மிகுதி அரசியல் தலைவர்கள் கூட்டணிக்கு வாருங்கள். அவர்கள் மூவரும் அரசியலில் இருந்து விலகுவது தமிழ் மக்களுக்கு செய்யும் பெரிய உதவி. இல்லாவிடின் மக்கள் அவர்களை அரசியலில் இருந்து அகற்றுவார்கள்.
காலையில் கூட்டணி அலுவலகத்தில் இருந்து கூட்டணியில் போட்டியிடுவதாக கூறிய சம்பந்தன் பின்னேரம் புலிகளை சந்தித்து தமிழரசு கட்சியில் போட்டியிட்ட பொய்யன்.
புலிகளின் ஏக பிரதிநிதி என கூறி நாடாளுமன்றம் சென்றவர்களை சந்திரிக்கா துரத்தியிருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் பெயரால் எப்படி நாடாளுமன்றம் செல்ல முடிந்தது ?
கள்ள வோட்டில் நாடாளுமன்ற போனோம் என்ற குற்ற உணர்ச்சி சற்றும் இல்லாம இன்று ஜனநாயகம் பேசுகின்றார்கள்.
மஹிந்த என்னிடம் கோரினார், சமஸ்டி என பேச வேண்டாம் ‘இந்திய மொடல்’ என கேளுங்கள் என்றார். என்னுடைய ‘இந்திய மொடல்’ எனும் யோசனையை கோட்டாவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

No comments