மாணவி துஷ்பிரயோகம்; தமிழரசின் உறுப்பினர் கட்சி நீக்கம்

மாணவியொருவரை துஸ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழரசுக்கட்சியின் உறுப்பினரான எம்.எம்.ரதன் மீது ஒழுக்காற்று  நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தமது  கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட கிளை தலைவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

செட்டிகுளம் மகாவித்தியாலய ஆசிரியரும் தமிழரசுக்கட்சியின் உறுப்பினருமான எம்.எம்.ரதன், மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக வெளியான குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,

வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக எமது கட்சியின் உறுப்பினர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழரசுகட்சியின் வவுனியா கிளை ஆராய்ந்திருந்தது.

இந்நிலையில் அவர் மீது கட்சியின் தலைமை விசாரணை ஒன்றை மேற்கொண்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் வவுனியா மாவட்ட கிளை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

அத்துடன் விசாரணை நடவடிக்கைகள் இடம்பெற்று முடியும் வரை அவர் கட்சிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டமைக்கமைய, அவர் கட்சியின் உறுப்புரிமை மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார் - என்றார்.

No comments