தேர்தல்கள் இப்போதைக்கு இல்லையாம்?


எதிர்வரும் ஏப்ரல் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் 2020 ஓகஸ்ட் மாதம் வரையில், எந்தவொரு தேர்தலும் நடத்துவதில்லை என்ற தீர்மானத்துக்கு, தற்போதைய அரசாங்கம் வந்துள்ளது என்றும் இது தொடர்பில், சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுனர் பசில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அரசாங்கம் என்ற ரீதியில், பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் உள்வீட்டுப் பிரச்சினைகள் பல உள்ளதால், அவற்றுக்குத் தீர்வு கண்ட பின்னரே, தேர்தலை நோக்கி நகர்வது உசிதமானதென்றும், ரணிலிடம் பசில் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு, இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் வரையில் கால அவகாசம் இருப்பதால், அதுவரையில் நாடாளுமன்றத்தைக் கலைக்கா, அவசரப்பட்டு தேர்தலை நோக்கி நகராமலிருப்பதற்கே அரசாங்கம் யோசித்து வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளாராம்.

No comments