கேரளா மாணவனுக்கு கொரோனா வைரஸ் தாக்கம்!

சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது!!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சீனாவிலிருந்து வரும் விமானப் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில், சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த முதல் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை இந்தியா தெரிவித்துள்ளது. நோயாளி சீனாவின் வுஹான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர். ஒரு அறிக்கையில், மாணவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்று PIB தெரிவித்துள்ளது.

No comments