1000 ரூபாய் வழங்க அமைச்சரவை அதிரடி தீர்மானம்

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள அமைச்சரவை இன்று (14) தீர்மானித்துள்ளது.

இதற்கான நிதியை உடனடியாக ஒதுக்குமாறு ஜனாதிபதியும் பிரதமரும் கூட்டாக அமைச்சரவையில் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அரசு நாளை (15) உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளது.

அதேசமயம் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானும் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தி இதனை அறிவிக்கவுள்ளார்.

No comments