கோத்தா அரசிடம் தூர நோக்கு சிந்தனை கிடையாது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திடம் தூரநோக்கு சிந்தனை கிடையாது என்றும் சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுப்பதே அதன் கொள்கையாக மாறியுள்ளது என்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

கண்டியிலுள்ள சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலருடன் ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

No comments