யாழ்.ஊடக விருது யாழில்!


யாழ்.ஊடக விருது வழங்கும் நிகழ்வில் மயில்வாகனம் நிமலராஜன் விருதை மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகர் இன்று இரவு பெற்றுள்ளார்.

மயில்வாகனம் நிமலராஜன் ஞாபகர்த்தமான நெருக்கடியான சூழலில் அறிக்கையிடல் பணிக்கான விருதையே மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகர பெற்றுள்ளார்.

இதனிடையே ஊடகவியலாளர் தராகி சிவராம் ஞாபகார்த்த அர்ப்பணிப்புமிக்க ஊடக சேவைக்கான    விருது(வடக்கு) இனை மூத்த ஊடகவியலாளரும் காலைக்கதிர் ஆசிரியருமான நடேசப்பிள்ளை வித்தியாதரன் பெற்றுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றிரவு நடைபெற்ற யாழ்.ஊடக விருது விழாவிலேயே வடமாகாண மேல்நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிறேமசங்கரிடம் அவர் இவ்விருதை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதனிடையே ஜயாத்துரை நடேசன் ஞாபகார்த்த அர்ப்பணிப்புமிக்க ஊடக சேவைக்கான விருது(கிழக்கு) இனை மூத்த ஊடகவியலாளர் விஸ்வராஜா காந்தகுமார்,மட்டக்களப்பு பெற்றிருந்தார்.

அதேபோன்று ஊடகவியலாளர் செல்வராசா ரஜிவர்மன் ஞாபகார்த்த போர்க்கால ஊடகப்பணி மற்றும் தொடரும் ஊடக சேவைக்கான விருதினைஊடகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் ,கிளிநொச்சி பெற்றிருந்தார்.

அதே போன்று புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி ஞாபகார்த்த  நெருக்கடிகளிற்கு மத்தியிலான பெண் ஊடகவியலாளராக ஊடகப்பணிக்கான விருதை ஊடகவியலாளர் செல்வி.சதாசிவம் சகீலா,முல்லைதீவு, பெற்றிருந்தார்.

மற்றொரு ஊடகவியலாளரான  சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த வருடத்தின் சிறந்த செய்தி புகைப்படத்துக்கான  விருதை நெருக்கடிகள் மத்தியிலான பணியாற்றிய தர்மபாலா திலக்சனும்

சுப்பிரமணியம் சுகிர்தராஜன் ஞாபகார்த்த  வருடத்தின் சிறந்த பிரதேச செய்தியாளர் விருதை சக முஸ்லீம் ஊடகவியலாளரான லாபீர் அவர்களும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments