மீன் பிடித்து வீடு திரும்பியவர் மரணம்

பருத்தித்துறை - இன்பர்சிட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இளம் கடற்றொழிலாளி ஒருவர், திடீர் மரணமடைந்துள்ளார்.

24 வயதான த.தர்சன் என்ற குடும்பஸ்தர், ஆழ்கடல் தொழிலுக்கு சென்று நேற்று (29) கரை திரும்பியிருந்த நிலையில், இரவு நித்திரைக்கு சென்றவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments