கடத்தல் விவகாரம்; தூதரக ஊழியரை விட மறுக்கும் சிஐடி

அண்மையில் கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியராரிடம  வாக்குமூலம் பதிவு செய்வது முடிவடையவில்லை என்று சிஐடியினர் இன்று (12) கோட்டை நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த ஊழியருக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை 17ம் திகதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குறித்த பெண் ஊழியர் கடந்த 8ம் திகதி முதல்முறையாக தனது தூதரக அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் சகிதம் சிஐடியில் ஆஜராகியிருந்தார்.

இந்நிலையில் குறித்த ஊழியரிடம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அன்று (08) மறுநாள் (09) காலை வரை 9 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது. அத்துடன் (09) அன்று மாலை முதல் இரவு வரை விசாரணை செய்த சிஐடியினர் 6 மணி நேரம் வாக்குமூம் பெற்றனர்.

மேலும் மறுநாள் (10) மூன்றாவது நாளாக சிஐடியில் ஆஜரான அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றப்பட்டது.

அத்துடன் குறித்த ஊழியர் மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு பெண் சட்டவைத்திய அதிகாரியிடம் (09), (10) இரு நாட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments