மாடு ரூபத்தில் வந்த எமன்; ஒருவர் உயிர் பாேனது

வவுனியா - புளியங்குளத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நேக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் ஏ9 வீதியில் நின்ற மாட்டுடன் மோதியுள்ளனர். இதன்போது தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும் எதிரில் வந்த பேருந்துடன் மோதியுள்ளனர்.

இதன் காரணமாக வத்தளையை சேர்ந்த கிருபாகரன் துஸ்யந்தன் (21-வயது) பலியானதுடன்  அவருடன் பயணித்த ரஞ்சித்குமார் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இளைஞர்களின் மோட்டார் சைக்கிளில் மோதுண்ட மாடும் பலியாகியுள்ளது.

No comments