கூட்டமைப்பு சஜித்தை ஆதரிக்க இதுவே காரணம்- வியாழன்

தமிழ் மக்களது பிரச்சினையைத் தீர்க்கும் ஆற்றல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இருக்கிறது என்பதை அறிந்தும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான நட்பின் காரணத்தினால்தான் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் இன்று (20) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய ஆளுமையுடையவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். அவருடைய தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம். அவர்களுக்கே இந்த நாட்டிலுள்ள பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய, முன்னேற்றக் கூடிய ஆளுமையுள்ளது.

இது தெரிந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனான நட்பை சீர்குழைத்துவிடக்கூடாது என்பதற்காகவே சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்குமாறு கூட்டமைப்பினர் கூறினர் - என்றார்.

No comments