நுழைய தடை:பதற்றத்தில் மாணவர்கள்!


யாழ் பல்கலை வளாகத்தினுள் நாளை மற்றும் நாளை மறுதினம் மாணவர்கள் உள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.அத்துடன் நாளை 27ம் திகதி எந்தவொரு நிகழ்வும் நடத்தக்கூடாது எனவும் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று செவ்வாய்கிழமை மற்றும்19 மற்றும் நாளை எந்த ஒரு நிகழ்வையும் நடத்த வேண்டாம் என யாழ் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரியான கந்தசாமியினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று காலை தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய தலைவர் வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் பட்டிருந்த நிலையில் இத்தடை உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வருடம்தோறும் கார்த்திகை 27 அன்று நண்பகல் 12 மணிக்கு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் மாவீரர் நாள் நிகழ்வு பல்கலைக்கழக மாணவர்கள் நினைவு கூரப்பட்டு வருவது வழமையாகும்.

இந்நிலையிலேயே உள்ளுர் பத்திரிகைகளிற்கு அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி இன்றிரவு அனுப்பி வைத்துள்ள பத்திரிகை விளம்பரத்தில் மாணவர்களினை உள்நுழைய தடை விதிப்பதாக அறிவித்துள்ளார்.

No comments