பாடசாலை அபிவிருத்தி குழுவே காரணம்?


முல்லைதீவு குமுழமுனை மகாவித்தியாலய மதில் வெள்ளத்தில் வீழ்ந்த சம்பவம் தொடர்பில் சில தரப்புக்கள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவை குற்றம் சுமத்துவது மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரது சதி முயற்சியென அம்பலமாகியுள்ளது.

குறித்த நிர்மாணவேலையை மேற்கொண்டது பாடசாலை அபிவிருத்திக்குழு.இதற்கான நிதி சிவமோகன் ,சாந்தி மற்றும் றிசாட் ஆகியோரால் வழங்கப்பட்டது. மதிலின்; ஒருபகுதி கனமழை வெள்ளம் காரணமாக ஐந்து அடி நீர் மதிலின் இருபுறமும் சூழ்ந்து பலமணிநேரம் தடை செய்ய முடியாது ஓடியதால் அத்திவாரத்துடன் பிரண்டுள்ளது இவ் மதில் உடைந்த வேளை வீதியால் சென்ற தாயொருவரை உடைப்பெடுத்து ஒடிய வெள்ளம் இழுத்துச் சென்ற நிலையில் கடும் முயற்சியின் பின் அவர் காப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில் சாந்தியால் வழங்கப்பட்ட நிதியில் அவரே நேரில் நின்று கட்டிய மதில் வீழ்ந்ததாக பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments