சஜித்திற்கு தோள் கொடுத்தார் சந்திரிகா!


ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஜனநாயக தேசிய முன்னணியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்புடன் தொடர்புடைய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
தற்போதைய நிலையில், இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட 12 முன்னணி கட்சிகள் கொழும்பில் ஒன்றிணைந்துள்ளன.
சிவில் அமைப்பு ஒன்றும் இன்றைய தினம் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இந்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டுள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்தர கட்சியின் மாற்று குழுவாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட தரப்பினர் இந்த கூட்டமைப்புடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments