எஸ்பியின் வாகனத்தில் இருந்து துப்பாக்கி சூடு; இருவர் காயம்

நுவரெலியா - கினிஹத்தேன, பொல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க பயணித்த வாகனத்தை வழிமறித்ததாகக் கூறப்படும் குழு ஒன்றின் மீது அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

நேற்று (06) இரவு 8.30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்கவின் வாகனம் அங்கிருந்து வௌியேறியுள்ளது.

No comments