சஜித்துக்காக முல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பங்கு கொள்கின்ற மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்று இன்று முல்லைத்தீவு முள்ளியவளை விநாயகர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது.
அந்த வகையில் குறித்த விநாயகர் விளையாட்டுக்கழக மைதானம் மற்றும் முள்ளியவளை தொடக்கம் முல்லைத்தீவு வரை வீதிகள்தோறும் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலையில் கூட்டத்திற்காக மக்கள் வருகை தந்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது
சோதனைகளின் பின்னர் மக்கள் மைதான வளாகத்துக்குள் செல்வதற்கு அனுமதிக்கின்றதோடு வீதிகளெங்கும் பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments