போதைப் பொருள் கண்டறியும் சோதனையில் ரோபோக்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் கண்டறிதல் நடவடிக்கைக்காக இரு ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருளை கண்டறிய இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இவை சீன அரசாங்கத்தினால் அண்மையில் வழங்கப்பட்டது என கூறினார்.
மேலும் இந்த ரோபோக்கள் போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டத்திற்கு பயனளிக்கும் என பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

No comments