நவ.2:ஊடக வன்முறைக்கெதிரான தினம்!


ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினத்தை நினைவுகூரும் பொருட்டு வடக்கு முழுவதும் மக்களை சந்திக்கும் விழிப்புணர்வு பயணத்திற்கு யாழ்.ஊடக அமையம்; அழைப்புவிடுத்துள்ளது.

நவம்பர் 2ஆம் திகதி, அனுஸ்டிக்கப்படுகின்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச தினத்தை நினைவுகூரும் பொருட்டு, யாழ்.ஊடக அமையம் மீண்டும் ஊடகப்படுகொலைகளிற்கு நீதியை வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவது ஆட்சி பீடத்திலேறும் அனைத்து தரப்புக்களதும் கடமையென யாழ்.ஊடக அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன் முதல் கட்டமாக நாளை சனிக்கிழமை குடாநாடு முழுவதுமாக மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டும் துண்டுபிரசுரங்களை யாழ்.ஊடக அமையம் விநியோகிக்கவுள்ளது.

படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவுதூபியிலிருந்து புறப்படும் விழிப்புணர்வு பயணம் அனைத்து பிரதேசங்கள் வரையிலும் பயணிக்கவுள்ளது.

தொடர்ச்சியாக வவுனியா,மன்னார்,முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஊடக அமைப்புக்களுடன் இணைந்து விழிப்புணர்வு பயணிக்கவுள்ளதாக யாழ்.ஊடக அமையம் அறிவித்துள்ளது.

No comments