டெங்கினால் பலியான சிறுமி!

யாழ். – சுன்னாகம் உடுவில் பகுதியில் டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி  உயிரிழந்துள்ளார்.
டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான மாணவி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடந்த 3 தினங்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி (வயது -9) என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்தார்.
கடந்த 16ஆம் திகதி காய்ச்சல் காரணமாக சிறுமி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபப்பட்டார்.
அவருக்கு டெங்கு நோய்த் தொற்று உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

No comments