பெருந்தொகை ரவைகள் மீட்பு!

திருகோணமலையில் பெருமளவான கைத்துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் 1060 கைத்துப்பாக்கி ரவைகளை தாம் கைப்பற்றியதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த கைத்துப்பாக்கி ரவைகள் கண்டெடுக்கப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட ரவைகள் மிக பழையதாக காணப்பட்டதுடன் மேலதிக பரிசோதனைக்காக கடற்டையின் தலமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments