யாழில் இருந்து சென்னை சென்ற பயணிகள் விமானம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் முதலாவது விமானத்தில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனும் பயணித்துள்ளார்.
யாழிலிருந்து இன்று (திங்கட்கிழமை) காலை எயார் இந்தியா நிறுவனத்தின் AL 9 102 பயணிகள் விமானம் சென்னைக்கு பயணித்தது.
இந்த விமானத்திலேயே வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனும் பயணித்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையில் புதிய உறவுகளையும் புதிய வர்த்தக தொடர்புகளையும் இந்த விமான நிலையத்தினூடாக உருவாக்கமுடியும் என்று எதிர்பார்ப்பதாக ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இதன்போது குறிப்பிட்டார்.

No comments