உஸ்ரீலசுகவுடன் இணைந்த ஸ்ரீலசுகவினர் நீக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு நடத்திய மாநாட்டில் கலந்துகொண்ட சகல தொகுதி அமைப்பாளர்களையும் கட்சியிலிருந்து நீக்குவதாக சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
அத்தோடு குறித்த உறுப்பினர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்றது.
இதன்போது இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் பதில் தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த கூட்டத்திற்கு முன்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை தலைமையாகக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் மாநாடு கொழும்பில் இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்களென சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments