காவல் ஆய்வாளருக்கு பணியிடமாற்றம்; கதறி அழும் மக்கள்!
சென்னை காசிமேடு காவல் ஆய்வாளர் சிதம்பர முருகேசன். இவர் அப்பகுதியில் உள்ள மக்களின் செல்லப்பிள்ளையாக உள்ளார். அப்பகுதியில் சாராயம், கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனை கொடிகட்டி பறந்து கொண்டிருந்த நிலையில் அவை அனைத்தையும் இல்லாமல் காசிமேடு பகுதியை சுத்தமாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு.
அதுமட்டுமின்றி பெண்களுக்குப் பாதுகாப்பும் அப்பகுதியில் உறுதிசெய்யப்பட்டது இவரால் தான். அதனால் மக்கள் மத்தியில் சூப்பர் ஹீரோவாக மாறியுள்ளார் ஆய்வாளர் சிதம்பர முருகேசன்.
இருப்பினும் காசிமேடு பகுதிவாசிகள் சாலையில் குடும்பத்துடன் அமர்ந்து மறியல் செய்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. காரணம், சிதம்பர முருகேசன் அம்பத்தூர் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட தகவல் அறிந்து தான் மக்கள் இந்த சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அனைவரும் ஒன்று திரண்டு, நேர்மையான காவல் ஆய்வாளர் சிதம்பர முருகேசனை இடமாற்றம் செய்ய கூடாது என்றும், தொடர்ந்து காசிமேட்டிலேயே பணிபுரிய ஆணையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.சம்பவ இடத்துக்கு வந்த அவரை கண்டதும் கதறி அழுத அப்பகுதி மக்களை அவர் சமாதானம் செய்தார்.
என்ன தான் காவல்துறையின் நடவடிக்கை மீது பலருக்கும் பல விதத்தில் அதிருப்தி இருந்தாலும் இதுபோன்ற நேர்மையான அதிகாரிகளைப் பாராட்ட வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.
அதுமட்டுமின்றி பெண்களுக்குப் பாதுகாப்பும் அப்பகுதியில் உறுதிசெய்யப்பட்டது இவரால் தான். அதனால் மக்கள் மத்தியில் சூப்பர் ஹீரோவாக மாறியுள்ளார் ஆய்வாளர் சிதம்பர முருகேசன்.
இருப்பினும் காசிமேடு பகுதிவாசிகள் சாலையில் குடும்பத்துடன் அமர்ந்து மறியல் செய்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. காரணம், சிதம்பர முருகேசன் அம்பத்தூர் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட தகவல் அறிந்து தான் மக்கள் இந்த சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அனைவரும் ஒன்று திரண்டு, நேர்மையான காவல் ஆய்வாளர் சிதம்பர முருகேசனை இடமாற்றம் செய்ய கூடாது என்றும், தொடர்ந்து காசிமேட்டிலேயே பணிபுரிய ஆணையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.சம்பவ இடத்துக்கு வந்த அவரை கண்டதும் கதறி அழுத அப்பகுதி மக்களை அவர் சமாதானம் செய்தார்.
என்ன தான் காவல்துறையின் நடவடிக்கை மீது பலருக்கும் பல விதத்தில் அதிருப்தி இருந்தாலும் இதுபோன்ற நேர்மையான அதிகாரிகளைப் பாராட்ட வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.
Post a Comment