போராட்டங்கள் இனி இல்லை?


தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இன்று அவருடன் தமது கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள இந்த காலப்பகுதியில் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிக்கை ஒன்றை விடுத்து பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார். விசேடமாக பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத தொழிற்சங்கம் அதனை கைவிட்டு பேச்சுவார்த்தையின் மூலம் தமது கோரிக்கைகளுக்கு பதிலை பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் இன்றைய தினம் கலந்துரையாட எதிர்பார்பதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜானக்க பெர்னாண்டோ அததெரணவிற்கு தெரிவித்தார். எவ்வாறான வேண்டுகோள் முன்வைக்கப்பட்டாலும் தமது தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments